இதில்
அதிமுக வேட்பாளர் சரோஜாவின் சொந்த ஊரான பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த
ராஜு என்பவரது மனைவி சாலையம்மமாள் (60) என்பவரும் ஜெயலலிதாவைப்
பார்ப்பதற்காக பேளூருக்கு வந்துள்ளார். அங்கே ஏற்காடு தொகுதியைச்
சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம்,
பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் அழைத்து
வரப்பட்டிருந்தனர். அம்மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி பொறுப்பாளர்களும்
தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்ததால், ஜெயலலிதாவை காண்பதற்கு கூட்டம்
அலைமோதியது.
இந்த
கூட்டத்தில் சிக்கிய சாலையம்மாள் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனடியாக
அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள வாழுப்பாடி மருத்துவமனைக்கு
கொண்டுசெல்ல முயற்சித்துள்ளனர். ஆனால், கடும் போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டதால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியவில்லை.
இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவசுப்பிரமணியம்nakkheeran.in
சிவசுப்பிரமணியம்nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக