ஞாயிறு, 10 மார்ச், 2013

மின்சாரம் தாக்கி வீசியெறியப்பட்ட அஞ்சலி

டைரக்டர் மு.களஞ்சியம் கதாநாயகனாக நடித்து, டைரக்டு செய்யும் புதிய படம் ஊர் சுற்றி புராணம். இந்த படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக திருப்போரூர் வடக்கு மாடவீதியில் உள்ள தனியார் சத்திரத்தில் நடைப் பெற்று வருகிறது.படப்பிடிப்புக்காக சத்திரத்தில் ஓட்டல் செட் போடப்பட்டிருந்தது. 09.03.2013 சனிக்கிழமை களஞ்சியம் மற்றும் அஞ்சலி சம்மந்தப் பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன. வாசற் படிக்கட்டில் இருந்து அஞ்சலி வீட்டின் உள்ளே வருவதுபோன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக அஞ்சலி செருப்பு அணியாமல் உள்ளே நடத்து வந்தார். அப்போது ஜெனரேட்டருக்கு செல்லும் மின்சார ஒயரில் இருந்து மின்சாரம் கசிந்துக் கொண்டிருப்பதை யாரும் கவனிக்கவில்லை. வீட்டின் உள்ளே நடந்து வந்த அஞ்சலி தற்செயலாக ஒயர் மீது கால் வைத்தவுடன் மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசியெறியப்பட்டு அவர் மயங்கி கீழே விழுந்தார்.
இதனால் படப்பிடிப்புக் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அஞ்சலியை திருப்போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அஞ்சலிக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு கண் விழித்த அஞ்சலி பின்னர் அங்கிருந்து படபிடிப்பு நடந்த இடத்திற்கு நடிக்க வந்தார். ஆனால் படபிடிப்பு நிறுத்தப்பட்டதாக இயக்குனர் களஞ்சியம் அறிவித்ததை தொடர்ந்து காரில் ஏறி நடிகை அஞ்சலி சென்னை சென்றார்.
இதுகுறித்து இயக்குனர் மு.களஞ்சியம் கூறியதாவது:- மின் ஒயர் பிய்ந்து கிடந்ததை கவனிக்காமல் அதன் மீது நடிகை அஞ்சலி கால் வைத்து விட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு மூர்ச்சையானார். மருத்துவ சிகிச்சைக்குபின் நலம் அடைந்தார் தற்போது நலமோடு இருக்கிறார். வரும் திங்கள் வழக்கம் போல் படபிடிப்பு நடைபெறும் என தெரிவித்தார்..nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக