கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
பயணம் செய்த அரசு வாகனம் விபத்துக்குள்ளானது. மாவட்ட ஆட்சியர் பூஜா
கல்கர்னி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில்
இருந்து சேலம் போகும் வழியில் வீரஆஞ்சநேயர் கோயில் பகுதியில் காரில்
சென்றபோது முன்னால் சென்ற பேருந்தில் இவர்களது கார் மோதியது. இதில் காரில்
பயணம் செய்த கலெக்டர் மற்றும் உதவியாளர் ஜெய்சங்கர், முனியப்பன், டிரைவர்
ஆகிய நான்கு பேரும் காயம் அடைந்தனர். இதில் முனியப்பன் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி
மாவட்டம் 2003 ஆம் ஆண்டு புதிய மாவட்டமாக தொடங்கப்பட்டது, இதுவரை 5 பேர்
மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்துள்ளனர். இந்த 5 பேரும் ஆண்கள். தற்போது
பூஜா கல்கர்னி 6வது கலெக்டர் ஆவார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதல்
பெண் கலெக்டர் என்பது குறிப்பிட தக்கதாகும்.http://www.nakkheeran.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக