திங்கள், 7 நவம்பர், 2011

அமைச்சர்கள் தங்களை அமைச்சர்கள் என்று சொல்லவே பயப்படுகிறார்கள்: வைகோ


கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது;
தற்போது தமிழக அமைச்சர்கள் அனைவரும் தங்களை அமைச்சர்கள் என்று சொல்லவே பயப்படுகிறார்கள். காரணம் அவர்களது பதவி எப்போது வேண்டும் என்றாலும் பறிக்கப்படலாம்.
ம.தி.மு.க.வில் உள்ள ஒரு நிர்வாகியை கட்சியை வீட்டு நீக்க வேண்டும் என்றால் ஒரு ஆண்டுவரை யோசிப்பேன். அந்த பதவியை பறிப்பதால் அவர்களது குடும்பம் எந்த அளவுக்கு பாதிக்கும் என உணர்ந்து அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியை பணியை சரிவர செய்யவில்லை என்றால் நீக்கப்படுவார்கள்.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கவுரமான இடத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நாம் நிரூபிக்க இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக