செவ்வாய், 18 அக்டோபர், 2011

பாக். எல்லையில் அமெரிக்க வீரர்கள் குவிப்பு !



இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இங்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகளை அழிக்க புதிய படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அப்பகுதியில் உயர் கோபுரம் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வீடு, வீடாக சென்று சோதனை நடத்துவதுடன்,
பாகிஸ்தானின் எல்லை நகரான குலாம் கான் மற்றும் கோஸ்ட் முக்கிய இணைப்பு சாலையை மூடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், அமெரிக்கா மற்றும் நேட்டோ படையிடம் இருந்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. எல்லை பகுதியில் போர் விமானங்கள் பலமுறை வட்டமிட்டதாக குலாம் கான் கிராம மக்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக