ஞாயிறு, 9 அக்டோபர், 2011

ரம்பாவின் குழந்தைக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு

எட்டு மாத குழந்தையுடன் இந்தியா வந்துள்ள ரம்பாவிற்கு, ரம்பாவின் அண்ணன் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கா‌ர் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். கனவு தேவதையாக ரசிகர்களின் கனவுக்குள் நுழைந்து, இதயத்துள் நிறைந்து, தன் குதூகலிக்கும் சிரிப்பால்   ரசிகர்களை தன் நடிப்பால் கட்டி போட்டு வைத்தவர் நடிகை ரம்பா.கடந்த ஆண்டு, கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் குடியேறினார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ரம்பாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு லான்யா என்று பெயர் வைத்துள்ளார். லான்யா என்றால் சமஸ்கிருதத்தில் தேவதை என்ற பொருளாம்.இந்நிலையில் தனது எட்டு மாத குழந்தையை எடுத்து கொண்டு இந்தியா வந்துள்ளார் ரம்பா. குளிர்காலம் முடியும் வரை இந்தியாவில் தான் இருக்க முடிவு செய்துள்ளாராம். இந்தியா வந்துள்ள ரம்பாவிற்கு, அவரது அண்ணனும், தயாரிப்பாளருமான வாசு, குழந்தை லான்யாவிற்கு 50 லட்ச ரூபாயில் ரெண்ஜோவர்-ஜாகுவார் மாடல் காரை பரிசாக தந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக