ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

மாத்தறையில் முன்னாள் போராளிகள் அணிக்கு வெற்றி


இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி, புனர்வாழ்வு அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு அமைச்சின் உத்தியோகத்தர்களுடான மென்பந்து கிரிக்கெட் போட்டியொன்றில் மாத்றைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் அணி வெற்றியீட்டியுள்ளது.

இப்போட்டி மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. அமைச்சுகளின் உத்தியோகஸ்தர்கள் அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமைச்சுகளின் உத்தியோகஸ்தர்கள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அவ்வணி 10 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய முன்னாள் போராளிகள் அணி 7 ஓவர்களில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 64 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக