திங்கள், 12 செப்டம்பர், 2011

ரஜினியின் “ராணா” - வேலைகள் ஆரம்பம்!



            மீண்டும் ராணா படத்தின் வேலைகள் துவங்கிவிட்டதாகவும். ரஜினி படபிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த ஏப்ரல் 29-ந்தேதி ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இதன் படப்பிடிப்பு துவங்கிய போது ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். இதனால் படப்பிடிப்பு நின்றது.

சிகிச்சைகள் முடிந்து பூரண நலம் பெற்று ரஜினி சென்னை திரும்பி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவர் பழைய மாதிரி உற்சாகமாக இருப்பதாக நேரில் சந்தித்தவர்கள் கூறுகின்றனர். ராணா படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் நம்பிக்கை தெரிவித்தார். “ராணா” பட வேலைகளை துவங்குமாறு படத்தின் இயக்குனரை ரஜினி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியிலும் ஏ.வி.எம். ஸ்டூடியோவிலும் அரங்குகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. சில வாரங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். ஜோடியாக தீபிகா படுகோனே, இலியானா ஆகியோர் நடிக்கின்றனர்.

இரு நாயகிகளும் தாங்கள் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை சீக்கிரம் முடித்து விட்டு ராணா படத்துக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களும் அதை ஏற்று படங்களை வேகமாக முடித்து விட்டு ராணா படப்பிடிப்புக்கு வர உள்ளனர்.

மீண்டும் ரஜினியை அதே சுறுசிறுப்போடு திரையில் பார்க்க ரசிகர்கள் காத்துகிடக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக