ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

மாமனாரை தேடி வந்த இளைஞன் மர்ம மனிதனாம்

மாமனாரை தேடி வந்த இளைஞன் மர்ம மனிதனாம் (படங்கள்)

August 14, 2011  08:38 pm
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்திற்கு கராச்சில் தொழில் புரியும் தனது மாமனாரை தேடி வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொது மக்களால் மர்ம மனிதன் எனப் பிடிக்கப்பட்டு பள்ளிவாசல் ஊடாக பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இன்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றது.

குறித்த இளைஞர் ஒரு கடற்படை வீரர் மேலதிக பயிற்சிக்காக செல்வதற்கு பணம் தேவைப்பட்டதால் கராச்சில் தொழில் புரியும் தனது மாமனாரிடத்தில் பெற்றுச் செல்வதற்காக வந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து பிரதேச பொது மக்களால் பொலிஸ் நிலையம் சுற்றி வளைக்கப்பட்டதனால் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸ்ஸாக் (ஜவாத்) உள்ளிட்டோர் பொலிஸ் நிலையம் சென்று நிலைமைகளை ஆராய்ந்து தெளிவு பெற்று கூடியிருந்த மக்களுக்கு பள்ளிவாயல் ஒலிபெருக்கி ஊடாக தெளிவுபடுத்தினர்.

எனினும் குறிப்பிட்ட சில இளைஞர்கள் கற்களை வீசி குழப்ப முற்பட்ட வேளை இராணுவத்தினர் துரத்தியடித்து நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதனால் நகரிலுள்ள கடைகள் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக