செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

நில மோசடி: நடிகர் வடிவேலு மீது புகார்

நடிகர் வடிவேலு மீது நில மோசடி புகார் அளிக்கச் சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த பழனியப்பன்.
சென்னை, ஆக.1: நடிகர் வடிவேலு ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்துள்ளதாகச் சென்னை புறநகர் காவல் ஆணையர் ராஜேஷ் தாஸிடம் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டது.அசோக்நகரைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் கொடுத்த அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:2006-ம் ஆண்டில் தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் ஒரு தொழில் முதலீட்டு நிறுவனம் சார்பில் 34 சென்ட் நிலம் ஏலத்துக்கு வந்தது. அந்த நிலத்தை எனது மகன் சொக்கலிங்கம் பெயரில் ரூ. 20 லட்சத்துக்கு வாங்கினேன். முன்னதாக, இந்த நிலத்தை அடமானமாக வைத்துத் தொழில் முதலீட்டு நிறுவனத்திடம் மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த டி.கே.ராமச்சந்திரன் கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. கடனை அவர் திருப்பிச் செலுத்ததால் அந்த நிலம் ஏலத்துக்கு வந்துள்ளது. எனது மகன் வெளிநாட்டில் இருந்ததால் நான்தான் அந்த நிலத்தை அவ்வப்போது கண்காணித்து வந்தேன். இதற்கிடையே அந்த நிலத்தை நடிகர் சிங்கமுத்துவுக்குப் போலி ஆவணங்கள் மூலம் ராமச்சந்திரனின் மகன் பிரபு விற்றதாக கூறப்படுகிறது. சிங்கமுத்து அந்த நிலத்தை நடிகர் வடிவேலுக்கு விற்றாராம். போலி ஆவணங்கள் அடிப்படையில் அந்த நிலத்தை இப்போது வடிவேலு தனது மகன் பெயரில் வைத்துள்ளார்.2009ம் ஆண்டு அந்த நிலத்தில் நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர்கள் சுற்றுச்சுவர் கட்ட ஆரம்பித்தனர். அதைத் தடுக்க நான் முயன்ற போது எனக்கு அவர்கள் மிரட்டல் விடுத்தனர். அது குறித்து, அப்போதைய சென்னைப் புறநகர் காவல் ஆணையர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பழனியப்பன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக