ஏனைய சமூகத்தவர்களுக்குப் போன்று ஆதிவாசிகளுக்கும் சகல உரிமைகளையும் சுதந்திரத்தையும் அனுபவிக்க வகை செய்யப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஆதிவாசிகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் முழுமையாகப் பெற்றுக் கொடுக்கவூம் அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுள்ளதாகத் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 8ம் திகதி கொண்டாடவுள்ள உலக ஆதிவாசிகள் தின விழாவையொட்டி நேற்று வாகரை சல்லித்தீவில் தேசிய ஆதிவாசிகள் தினம் கொண்டாடப்பட்டது.
ஆதிவாசிகள் சமூகத் தலைவர் ஊறுவரிகே வன்னிலா எத்தோவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் விற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக