செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

சங்கிலிய மன்னன் சிலை நாளை திறப்பு

யாழ். மாநகர சபையினால் புனரமைக்கப்பட்ட முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலிய மன்னனின் உருவச்சிலை நாளை காலை 7 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. சிலையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக நேற்று முன்தினம் முத்திரைச் சந்தி பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். நகர முதல்வர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராசா, ஆரம்பகாலத்தில் சங்கிலியன் சிலையை வடிவமைத்த செல்லையா சிவப்பிரகாசம் உட்படப் பலர் தற்போது அமைக்கப்படும் சிலையைப் பார்வையிட்டனர்.
இவ்வாறு திறந்து வைக்கப்படவுள்ள சங்கிலியன் சிலை பெயர்ப் பலகையில் மாற்றம் இருக்கக் கூடாதெனவும் ஒருசிலையை பலதடவை திறந்துவைப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியவிடயமல்ல எனவும் அத்தோடு இந்த நிகழ்வை மாநகர சபையின் எதிரணியினர் பகிஷ்கரிக்கப் போவதாகவும் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக