ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

யாழ் சிவபூமி மாணவன் மரணத்தில் சந்தேகம் ?

யாழ். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவபூமி மாணவன் 11 நாள்களின் பின் சாவுவிபத்தில் சிக்கியதாகக் கூறப்படுவதில் சந்தேகம்
விபத்தொன்றின்போது காலில் காயமடைந்தார் எனத் தெரிவிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர் சிகிச்சை பயனளிக்காது பதினோராவது நாளான நேற்று மரணமானார்.
 
இந்த விபத்து மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவம் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்றது.தெல்லிப்பழை சிவபூமி பாடசாலை யில் பயிலும் நவாலியைச் சேர்ந்த சி.சாள்ஸ் (வயது  18) என்ற மாணவனே மரண மானார். ஓட்டோ ஒன்றில் சென்று கொண் டிருந்தபோது அவரது கால் ஒன்று கம்பத் துடன் மோதியதனால் விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதும் அந்த விபத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.யாழ். நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்த ராஜா மரணவிசாரணை மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக