ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

Be cool உபவேந்தர் பதவி கிடைக்காததால் சீற்றதில் கூல்

கூல் லண்டன் அவசர பயணம்!

யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பதவி கிடைக்காததால் கடும் சீற்றதில் இருக்கும் கூல் வழமை போல் பிரச்சனைகளை முகம் கொடுக்காமல் லண்டன் பயணமானார்.
நாட்டில் பிரச்சனைகள் நடக்கும் பொழுது வெளிநாட்டில் சுக போக வாழ்வு மேற்கொள்வதும் இலங்கை சுமூகமாக வந்தவுடன் திரும்ப வந்து நல்ல பதவிகள் பட்டங்கள் வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் என்ன வகையில் மனித நேயமாகும்.
இலங்கையில் பிரச்சனைகளின் போது மாணவர்களுடன் தோளோடு தோள் கொடுத்த பேராசிரியர்களை ஓரங்கட்டி விட்டு வல்லரசுகளின் பிரதிநிதியாக வெளிநாட்டில் இருந்து வந்து குதித்த கூல்க்கு பதவி கொடுக்க முடியுமா? கொடுத்தால் அது எந்த வகையில் நியாயம். உபவேந்தர் பதவி கிடைத்திருந்தால் அரசாங்கத்துக்கோ அல்லது டகளசுக்கோ எதிராக இதே கூல் பிரச்சாரம் புரிந்திருப்பாரா.
எந்த நாட்டிலும் சட்டங்கள் இருக்கிறது.மூன்றாம் உலக நாடுகளின் சட்டம் என்றால் கிள்ளுக்கீரையாக நினைத்து அவற்றை மதிக்காமல் விடுவது தவறு. வெளிநாட்டு செல்வாக்கு இருக்கிறது அல்லது பண பலம்  இருக்கிறது என்பதற்க்காக இலங்கை சட்டங்கள் செல்லுபடியாகாமல் போவது சரியா..
இலங்கை சட்டத்தை எதிர்நோக்க விரும்பாத ரட்ணஜீவன் கூல் இங்கிலாந்து பயணமானது பல இலங்கையரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இலங்கை சட்டங்களை மதிக்காதவர்களுக்கு இலங்கை பல்கலைக்கழக உபவேந்தர் பட்டம் கொடுப்பது எவ்வளவு தூரம் சரியாகும். இன்று இலங்கை அரசாங்கத்தால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறுபவர்  இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாகவே தன் பாதுகாப்பான பயணத்தை மேற்கொன்டு இருந்தார். ஒருபக்க சார்பாக நீண்ட நாட்களாக அமைச்சர் டக்களஸ் தேவானந்தா மீது ஆதாரமற்ற முறைகளில் கட்டுரைகள் பிரசாரங்கள் செய்து வந்த கூல் மீது சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
நண்பர்கள்,உறவினர்கள் தனது உயிருக்கு ஆபத்து என்று சொன்ன காரணத்தினாலேயே தான் லண்டன் பயணத்தை மேற்கொண்டதாக அவர் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.வழமை போல அவரது அந்த கூற்றிலும் எந்த வித ஆதாரமுமில்லை என்பதும் இவ்வகை கூற்றுக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தேர்தல்களின் போது இரக்க வோட்டு எடுப்பதற்கு பாவிக்க பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.சமாதானத்தின் பின்பு எங்கே அரசியல் கொலைகள் நடந்தது…வேண்டுமென்றால் கோழிகள் வெட்டப்பட்டதையும் கார் ஒயில் ஊற்றப்பட்டதையும் பூதாகாரமாக்கி புளங்காகிதம் அடையலாம்.
நன்றி
தமிழ்யுகே
புலிகளால் எவ்வளவு தூரம் அச்சுறுத்தலுக்கு தாங்கள் ஆளானீர்கள் என்பதை நாம் நினைவு கூறத்தான் வேண்டும். உண்மையிலேயே புலிகளின் வெறுப்பு பட்டியலில் இருந்தவர்கள் எல்லோருமே உயர்ந்த மனிதர்கள் தான். தாங்கள் தற்போது அமைச்சர் டக்ளசுக்கு எதிராக எழுதியும் பேசியும் வரும் கருத்துக்களை எம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லை? நீங்கள் முன்வைத்த கருத்துக்கள் பலவும் பிழையானவை என்பது உங்களுக்கே தெரியும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக