திங்கள், 25 ஜூலை, 2011

ஆடி மாதமும், ஆடி அடங்கா தமிழ் இனவாத அரசியலும் : ஒரு நினைவுக் கிளறல்-எஸ.எம்.எம்.பஸீர்



இலங்கை வரலாற்றில் ஆடி (ஜூலை) மாதம் வைகாசி (மே) மாதம் ஆவணி (ஆகஸ்ட்) மாதம் ஆகிய மாதங்கள் சகல இலங்கை மக்களாலும் மறக்கமுடியாத துர்ப்பாக்கிய சம்பவங்களால் நிறைந்திருக்கிறது. தமிழ் தேசியவாதிகளின் புலி ஆதரவாளர்களின் சிங்கள இனவெறியூட்டல்கள் ஆண்டுதோறும் ஆடி மாதத்திலும் வைகாசி மாதத்திலும் களமேற்றப்படும் பொழுது முழு இலங்கை மக்களும் தமிழ் தேசிய வெறியர்களும் பயங்கரவாதிகளுமான புலிகளால் மற்றும் ஆயுதம் தாங்கிய தமிழ் இயக்கங்களால் இலங்கை மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளையும் நாம் நினைவு கூறவேண்டியுள்ளது.
ஆடி மாதத்தில் இனவெறியாட்டத்தை (25.07.1983) ல் சிங்கள காடையர்கள் கட்டவிழ்த்து விட்டபின் அந்த வெறியாட்டத்துக்கு தூண்டுகோலாயிருந்த புலிப பயங்கரவாதம் முடிவுக்கு வரும் வரை வருடந்தோறும் ஆடி மாதத்தில் புலிகள் ஆடிய இனவெறியாட்டம் எமது கவனத்தையும் நினைவையும் விட்டு நீங்கவில்லை. ஆடி மாதமே புலிகளின் ருத்திர தாண்டத்துக்கு கால்கோளிட்ட மாதமாகும் அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்

தமிழீழம் காண்பதற்காக திரு பிரபாகரன் பெற்ற ஆயுதப்பயிற்சியினை முதல் முதலாக பரீட்சிப்பார்த்து அன்றைய யாழ் நகர பிதாவான திரு அல்பிரட் தரையப்பா அவாகளை படுகொலை செய்ததும் ஆடி மாதமே! (27.07.1975)
தழினத்தின் தானைத் தளபதி என வடமாகாண மக்களால் புகழாரம் சூட்டப்பட்ட திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். மற்றும் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் திரு யோகேஸ்வரன் ஆகியோர் இலங்கையின் தலைநகரான கொழும்பு பெளத்தாலோக மாவத்தையிலுள்ள அவாது வீட்டில்வைத்து விடுதலைப் புலிகளின் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட மாதம் ஆடி மாமாகும். (13.07.1989)
இலங்கையின் சர்வதேச விமான நிலையமும், விமானப்படைக்குச் சொந்தமான விமானங்களும் விடுதலைப் புலிகளினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இலங்கை மக்களுகளுக்கு 4.000 கோடி ரூபா நஸ்டத்தினை உருவாக்கியதும் ஆடி மாதமேயாகும். (23.07.2001)
•திருமலை மாவட்ட மூவின மக்களாலும் நேசிக்கப்பட்ட முன்னாள் மூதூர் பிரதிநிதியும், திருமலை மாவட்டத் தலைவரும் (1981 –1983) 1994 ல் திருமலை மாவட,டத்திலேயே ஆகக்கூடிய வாக்ககுளைப்பெற்று தெரிவான திரு தங்கத்துரை அவர்களும், திருமலை சண்முக வித்தியாலய அதிபர், உதவி அதிபர் மேலும் நால்வரும், ஜனாப் எம்.ஈ.எச் மஹ்ரூப் (பா.உ) அவர்களும் விடுதலைப் புலிகளின் ஆயுத வன்முறைக்கு பலியாக்கப்பட்டதும் ஆடி மாதமே! (05.07.1997)
பிரபல சட்டத்தரணியான திரு நீலன் திருச்செல்வம் அவர்கள் கொழும்பில்லவத்து விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்டதும் ஆடி மாதமே! (29.07.1999)
விடுதலைப் போராட்டம் என்னும் மாயையில் திரு பிரபாகரன் அவர்களால் ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டு பின்னர் கருணா அம்மானின் ஆதரவாளர்கள் என காரணங்காட்டப்பட்டு
•கொமுப்பின் பறநகர் பகுதியான கொட்டாவ என்னுமிடத்தில்லைத்து புலிகளின் ஆயுததாரிகளால் நஞ்சூட்டப்பட்டு வெட்டியும் சுட்டும் (8) இளைஞர்களை படு கொலைசெய்ததும் ஆடி மாதமே! (25.07.2004) இதே தினத்தில்தான் 21 வருடங்களின் முன்னர் வெலிக்கடைச் சிறையில் சிங்களப் பேரினவாதம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழர்கள்மீது கத்தியாலும், பொல்லுகளாலும் வெட்டியும் அடித்தும் கொல்லப்பட்டார்கள். அதே தினத்தில்தான் புலிப்பாஸிஸமும் தனது கொலைவெறியினை கொட்டாவையில் அரங்கேற்றியது.
5 சம்மாந்துறை ஜாரியா பள்ளியுள் தங்கியிருந்த முஸ்லிம்களை புலிகள் சுட்டுக் கொன்றதும ஆடி மாதமே! (23.07.1990)
•69 முஸ்லிம் யாத்திரிகர்களை அவர்கள் வீடு திரும்பும் வழியில் ஓந்தாச்சிமடத்தில் சுட்டுக் கொன்றதும் ஆடி மாதமே! (19.07.1990)
•14 முஸ்லிம் விவசாயிகளை அக்கரைப்பற்றில் புலிகள் கொன்றதும் ஆடி மாதமே! (02.07.1990)
19 பஸ் பிரயாணிகளை கிரான்குளத்தில் இறக்கி புலிகள் கொன்றதும் ஆடி மாதமே! (15.07.1990)
•7 முஸ்லிம் இரயில் பிரயாணிகளை தனித்து பிரித்து மட்டக்களப்பில் புலிகள் கொன்றதும் ஆடி மாதமே! (21.07.1990)
நாம் சந்தித்த பல துயரமும், இழப்புக்களும் நிறைந்த தசாப்தங்கள் மெதுவாக ஆனால் கனதியாக எம்மை விட்டு கழன்று போய்விட்டன. இனவாத அரசியல் பேசி ஏசி, இறுதியில் முள்ளிவாய்க்கால் வரை இழுத்து சென்றும் முற்றுபெற்று விடவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக இன்று வடக்கில் நடைபெறும் உள்ளூராட்சி தேர்தல் களத்தில் தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து நிரூபிக்க வேண்டும் என்று தாழ்மையாக புலம் பெயர் நாட்டில் இன மத விரோதத்துக் கெதிராக போதனை செய்யும் ஏசுவின் கிறிஸ்தவ சமயத்துக்கு எதிராக செயற்படும் விதத்தில் சிங்கள பெளத்த இனவாதம் பேசும் தமிழ் தேசியத்தின் தந்தை செல்வாவுக்கு பின்வந்த புலம் பெயர் நாட்டின் மத போதக தந்தை இம்மானுவேல் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழ் கூலிப் பட்டாளங்களை நிராகரிக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

வழக்கம் போலவே தமிழ் தேசியவாதிகள் தங்களின் “பாரம்பரிய ” மொழியில் மீண்டும் பேசத்தொடங்கியிருக்கிறார்கள். அந்த மொழி என்றும் ஒரே மொழியாகத்தான் இருக்கிறது, அதில் இதுவரை பேசப்பட்ட சொற்கள் யாவும் ஒன்றே. அந்த மொழியில் பேசினால்தான் தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள். ஆகவே இனவாத மொழியில் தேர்தல் பிரச்சாரங்கள் முடிக்கி விடப்பட்டு இன்று சாதாரண உள்ளூராட்சி தேர்தலும் பெரும் முள்ளிவாய்க்கால் போராட்டமாக தந்தை இம்மானுவேல் உடபட பலரால் சித்தரிக்கப்படுகிறது.
1983 ஆடி மாதம் தமிழரை அழித்த சிங்கள அரசு அதே தினத்தில் இந்த தேர்தலை நடத்துவதை வேறு புதிய உபாய இன அழிப்பாக அர்த்தப்படுத்தும் விதத்தில் தர்க்க விளக்கமளித்து முள்ளிவாய்க்காலை முன்னிறுத்திய போராட்ட அரசியலுக்கு இந்த தேர்தலை அடையாளப்படுத்துகிறார்கள்.
இந்த பின்னணியில் சற்று பின்னோக்கி பார்த்தால் தமிழ் தேசியவாதிகளின் முஸ்லிம் இனவாதம் தீவிர தமிழ் தேசிய வாதத்துடன் சமாந்தரமாக முளைவிட்ட காலமும் நம் மனத்திரையில் நிழலாடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக