திங்கள், 20 ஜூன், 2011

பாட புத்தகங்களை கிழிக்கும் பணி, மையிட்டு அழிக்கவும் கத்தரிக்கோல், ஸ்கேல், பிளேடு,



சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் பாடங்களை கிழிக்கவும், மையிட்டு அழிக்கவும் கத்தரிக்கோல், ஸ்டீல் ஸ்கேல், பிளேடு, கருப்பு மார்க்கர் பேனாவுடன் இன்று ஆஜராகும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ‘கிழிக்கும்’ பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் 1 மற்றும் 6&ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை இந்த ஆண்டும் தொடர சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 1 மற்றும் 6&ம் வகுப்புகளுக்காக அச்சிடப்பட்டுள்ள சமச்சீர் கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சிலரது கவிதைகள் இடம் பெற்றுள்ள பக்கங்களை கிழிக்கவும், சில பக்கங்களை கருப்பு மையால் மறைக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புத்தகத்தின் பின்பக்கத்தில் உள்ள செம்மொழி மாநாடு ‘லோகோ’வை பச்சை நிற ஸ்டிக்கரால் மறைக்கவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பச்சை நிற ஸ்டிக்கர்களை தேவையான அளவு பள்ளிக்கல்வித் துறையே ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது.

ஆனால் பக்கங்களை கிழிப்பதற்கு தேவையான பிளேடு, கத்தரிக்கோல், பாடங்களை மறைக்க கருப்பு நிற மார்க்கர் பேனா, ஸ்டீல் ஸ்கேல் ஆகிய பொருட்களை ஆசிரியர்களே கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

பல மாவட்டங்களில் ‘கிழிப்பு’ பணி நேற்றே தொடங்கியது. ஒன்றரை கோடி புத்தகங்கள் இருப்பதால் ஒரேநாளில் பணி முடியவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் புத்தக கிழிப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்று பணியில் ஈடுபட்டனர்.

அன்பன் தமிழ் செம்மொழி என்பது தமிழனின் பெருமை.ஆனால் அதை மறைக்க ஜெயலலிதா முயல்வது கருணாநிதியைப் பழிவாங்க என்று கூறிக் கொண்டு, அவரது குருவான சோ.ராமசாயின் ஆசையை(தமிழ் அளிப்பு) அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். இந்த பணிக்கு தேவையான பொருட்களையும் overtime salary அரசாங்கமே கொடுத்திருந்தால் ஆசிரியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்

தொடரட்டும் கிழிக்கும் பணி. இனிமேல் யாரும் ஆசிரியர்களை என்ன செய்து கிழித்தாய் என்று சொல்லமுடியாது
வாத்தியார்கள் படித்து கிழித்தது பத்தாமல் புது புத்தகத்தையும் பாவம் கிழிக்கிறார்கள்
வரலாறு படைக்கிறது தமிழக அரசு. பார்ப்பனீயம் தமிழ் இனத்தின் மீது எவ்வளவு  குரோதம் வைத்திருந்தால் இந்த வஞ்சனையை செய்ய மனந்துணிந்திருக்கும்?
 புத்தகங்களை கிழிக்கிறார்கள் வெட்டுகிறார்கள் அழிகிறார்கள் பசை போட்டு ஒட்டி மறைக்கிறார்கள், தமிழ் செம்மொழியானதில் பார்பனர்களுக்கு தான் எத்தனை கோபம்?
பத்ம சேஷாத்ரி குழும கல்வி நிறுவனங்களின் முதலாளியான Y,G.Paarthasarathi அம்மையார் மற்றும் சோ போன்றவர்களுக்கு வயிற்றில் பால் வார்த்தது போன்றிருக்குமே? தமிழன் எவ்வளவு தரம் தாழ்ந்து கிடக்கிறான் என்பதை விளக்க  வார்த்தைகள் தேவை இல்லை, அமைச்சர்களும் கூட ஜெயாவின் காலில் விழுந்து கிடக்கும் காட்சி ஒன்றே போதும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக