ஞாயிறு, 29 மே, 2011

ஜெர்மனில் ஈழத்தமிழர் பொருளியல் செனட்டராக நியமனம்

இலங்கையின் வடக்கே யாழ். குடாநாட்டை பிறப்பிடமாகக் கொண்ட தமிழர் ஒருவர் ஜொ்மனியில் பொருளியல் செனட்டராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இயன் கிருகரன் என் 72 வயதுடைய தமிழரே ஜெர்மனியின் ஹம்பேர்க் பகுதியின் பொருளியல் செனற்றராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறையில் 1939 ஆம் ஆண்டு பிறந்த அவர் 1970 காலப்பகுதியில் ஜெர்மனிக்கு சென்றிருந்தார்.

அதற்கு முன்னர் தனது கல்வியை இங்கிலாந்தில் நிறைவு செய்திருந்த இவர், ஜொ்மனியில் கொள்கலன்களை வாடகைக்கு விடும் உலகின் மிகப்பெரும் நிறுவனத்தில் பணியாற்றி பின் சொந்த நிறுவனமொன்றை ஆரம்பித்தார் என தெரியவருகிறது.

ஜொ்மனியில் அமைச்சர் நிலைக்கு உயா்ந்து ஈழத்தமிழர்களுக்குப் பெருமை சோ்த்துள்ள கிருகரன் வசிக்கும் ஜெர்மன் நாட்டில் அரை இலட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் வசிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக