ஞாயிறு, 29 மே, 2011

மாநில அண்ணா பல்கலை கழகங்களுக்கு மூடுவிழா ? மீண்டும் சென்னைக்கு கொண்டுவர திட்டம்?

பிரிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகங்களை இணைக்க அதிமுக அரசு திட்டம்

சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் ஊர் ஊருக்கு ஒரு அண்ணா பல்கலைக்கழகத்தை ஆரம்பித்து அண்ணா பல்கலைக்கழகத்தை கூறு போட்டனர். தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களையும் இணைத்து சென்னையில் மட்டும் இயங்கும்படி செய்ய அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளில் ஒன்று சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்தது.

இந்தப் பல்கலைக்கழகத்தைப் பிரித்து கோவை, திருச்சி, நெல்லை, மதுரை என பிரித்து கிளைகளை அமைத்தனர். அதன் பிறகு சென்னை அண்ணா, கோவை அண்ணா, நெல்லை அண்ணா, திருச்சி அண்ணா என்று அவை அழைக்கப்பட்டன.

தற்போது இந்த பல்கலைக்கழக பிரிவினையை ரத்து செய்து விட்டு ஒரே அண்ணா பல்கலைக்கழகமாக, முன்பு போல மாற்றியமைக்க அதிமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக