புதன், 27 ஏப்ரல், 2011

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு சக்தி காணப்படும் மையமாக இலங்கை!

உலகில் புவியீர்ப்பு சக்தி மிகவும் குறைவாக காணப்படும் மையமாக அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகளால் இலங்கை கணிப்பிடப்பட்டுள்ளது. உலகின் புவியீர்ப்பு சக்தி பிரிந்து செல்லும் பரம்பல் முறை குறித்து அண்மையில் விஞ்ஞானிகள் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர். அதன் போதே இலங்கையானது மிகவும் குறைந்த புவியீர்ப்பை கொண்ட மையமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலங்கையிலும் தென் மாகாணமும் அதன் கடலோரப் பகுதிகளுமே கூடுதலான அளவில் புவியீர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் பிரதேசங்களாகும். அதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகளால் இதுவரை கண்டறிய முடியாமற் போயுள்ளது. பொதுவாக கடலோரப் பிரதேசங்களில் அதிகூடிய புவியீர்ப்பு சக்தி காணப்படுவது இயல்பாக இருந்த போதிலும் தென்னிலங்கையின் கடலோரப் பிரதேசங்கள் அதற்கு எதிர்மாறான பண்பைக் கொண்டுள்ளன. உலகின் அதிகூடிய புவியீர்ப்புச் சக்தி வலயமாக பிரிட்டன் மற்றும் கிரீண்லன்ட் தீவுகளுக்கிடையிலான கடல் பகுதி காணப்படுவதுடன் அங்கு 60 100 வரையான மிலிகல் (புவியீர்ப்புச் சக்தி அளவீடு) புவியீர்ப்புச் சக்தி நிலவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக