திங்கள், 22 நவம்பர், 2010

கணேஷ் வெங்கட்ராமின் புதியபடம் "பனித்துளி"

Ganesh Venkatrams new film pani thuli
அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் போன்ற வெற்றி படங்களில் நடித்த கணேஷ் வெங்கட்ராமன் அடுத்து புதிதாக பனித்துளி என்ற படத்தில் நடிக்கிறார். தமிழில் அபியும் நானும் படத்தில் திரிஷா ஜோடியாக சிங் வேடத்தில் வந்த கணேஷ் வெங்கட்ராமன், அடுத்து கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். தற்போது மலையாளம் மற்றும் இந்தி சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால், அமிதாப் பச்சன் ஆகியோருடன் இணைந்து கந்தகார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழில் பனித்துளி என்ற படத்தில் நடிக்கிறார்.
இதுபற்றி அமெரிக்காவில் சூட்டிங்கில் உள்ள கணேஷ் வெங்கட்ராமன் கூறுகையில் நல்ல கதையம்சம் உள்ள படத்திற்காக காத்திருந்தேன், இப்படத்தின் கதையை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆகையால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இளைஞன் ஒருவன் சென்னையில் இருந்து அமெரிக்கா செல்கிறான். அங்கு அவனுள் ஏற்படும் காதல் மற்றும் அவன் சந்திக்கும் பிரச்சனைகளே படத்தின் கதை. இப்படத்தில் ஷோபனா, கல்பனா பண்டிட் என்ற இரண்டு புதிய கதாநாயகிகள் தமிழில் அறிமுகமாகின்றனர். படத்தை நேட்டி குமார், டாக்டர்.ஜெய் இயக்குகின்றனர். இப்படத்தை அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ட்ரீம்ஸ் ஆன் ப்ரேம்ஸ் நிறுவனமும், ஹெவுஸ் ஆப் பண்டிட்டும் இணைந்து தயாரிக்கின்றனர். ஹாலிவுட் கேமராமேன் கிரிஷ் எல்ரிட்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னர் தான் அமெரிக்காவில் துவங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக