திங்கள், 22 நவம்பர், 2010

நாடு கடந்த வேலுமயிலும் மனேகரன் இலங்கை சென்று உள்ளார்

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் முக்கிய பிரதநிதி ஒருவர் இலங்கை சென்று உள்ளார்
பிரான்ஸ் நாட்டின் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் முக்கிய முக்கிய பிரதிநிதியாக செயற்பட்டு வரும் வேலுமயிலும் மனேகரன் இலங்கைக்கு சென்று உள்ளார் என தெரியவருகிறது. இவரின் விஜயம் தொடர்பாக நாடுகடந்த அரசின்  வெளியுறவுதுறை அமைச்சர் தயாபரனிடம் ரிபிசி செய்தி பிரிவு கேட்ட பொழுது இவரின் விஜயம் பற்றி தனக்கு தெரியாது எனவும் நாடுகடந்த அரசின் பிரதிநிதியாக செய்யபட்டு கொண்டு விஜயம் செய்வதை தாம் கண்டிப்பதாகவும், ஆனால் தனிபட்ட விஜயம் என்கின்ற போது தாம் ஒன்றும் செய்யமுடியாது எனவும் தெரிவித்தார். இவருக்கான பயண ஒழுங்களை இலங்கை அரசு ஒழுங்களை செய்து உள்ளாதாகவும் தெரிவிக்கபடுகிறது. அரசினால் ஒழுங்கு செய்யபட்டிருக்கும் உல்லாச விடுதியில் தங்கி உள்ளாதாகவும் தெரியவருகிறது. இதேவேளை நாடுகடந்த அரசின் பிரதிநிதிகளை இலங்கை கருப்பு பட்டியலில் இணைத்துள்ளதும் குறிப்பிடதக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக