செவ்வாய், 23 நவம்பர், 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் அடுத்தக் கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி காரியாலயத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதிக்குக் கையளிக்கத் தீர்மானித்துள்ள மகஜர் குறித்தும் அதில் உள்ளடக்கப்படக்கூடிய விடயங்கள் குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பது, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வது என்பன குறித்து இக்கூட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக