செவ்வாய், 30 நவம்பர், 2010

பாக்.,கில்‌ இளம் பெண் மூக்கைஅறுத்து கொடுமை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தவறான நடத்தையி்ல் ஈடுபட்டதாக இளம் பெண்ணை அவளது உறவினர்கள் மூக்கை அறுத்தும், தனி அறையில் பூட்டிவைத்தும் சித்ரவதை செய்துள்ளனர். பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண‌த்தில் உள்ள குச்சரன்வாலா கிராமத்தினைச் சேர்ந்தவர் ஆஷியாபீபி. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் முல்டானில் பணியாற்றுகிறார். எனினும் இவர் மனைவியை காண அவ்வளவாக வருவதி்ல்லையாம். இதனால் ஆஷியாபீபிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்து அவரை அடித்து கொடுமைப்படுத்தியதுடன், அவரது மூக்கை அறுத்து தனி அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார், கணவரின் ‌ச‌கோதரிகள், மைத்து‌னர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக