செவ்வாய், 23 நவம்பர், 2010

தனியார் துறையினருக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்

தனியார் துறையினருக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது உரையாற்றுகையில் தெரிவித்தார். ஓய்வூதியம் பெறுவதற்கு தனியார் துறையில் குறைந்தது 10 வருடங்கள் பணியாற்றியிருக்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இத்திட்டம் மக்களுக்கு நல்ல பயனைத் தருவதாக அமையும் என்றும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்றும் அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக