ஞாயிறு, 21 நவம்பர், 2010

வடமராட்சியிலும் தென்மராட்சிலும் பூமியதிர்ச்சி என பரப்பரப்பு

யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி பகுதியிலும் தென்மராட்சி பகுதியிலும் இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் பூமியதிர்ச்சி என தகவல்கள் பரவின.
எனினும் அதனை உறுதிசெய்யமுடியவில்லை.
இந்தநிலையில் நிலக்கண்ணி அகற்றல் பணிகள் இந்தப் பிரதேசங்களில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அவற்றில் மூன்று கண்ணிவெடிகள் வெடிக்க வைத்து செயலிழக்க வைக்கப்பட்டமையின் அதிர்வே உணரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மழை காரணமாக இந்த சத்தம் கூடிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக