2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணையில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென ஆ.ராசாவுக்கு மத்திய நிதித்துறையின் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவின் அமல்பிரிவு இயக்ககம் (இ.டி.) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தவிர தொலைத்தொடர்புத் துறை அமைச்சக உயரதிகாரிகள் சிலருக்கும் அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசியல் தரகராக செயல்பட்ட நீரா ராடியாவிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியது.
அவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆ.ராசா மற்றும் அதிகாரிகளிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த இருக்கிறது என்று தெஹல்கா இணையதளம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக