செவ்வாய், 26 அக்டோபர், 2010

வேட்டையாடும் சமீரா ரெட்டி


         ‘வேட்டை’ யில் ஆர்யா நாயகனாக நடிப்பதாகவும், வில்லத்தனமான அண்ணனாக மாதவன் நடிப்பதாகவும் முடிவாகிவிட்டாலும் கதாநாயகியின் தேடல் மட்டும் தொடர்ந்து நடந்துவந்தது.   அந்தத் தேடல் வேட்டையில் கிடைத்திருப்பவர் சமீரா ரெட்டி. 



பையா படத்திற்கு பிறகு, தயாநிதி அழகிரியும், லிங்குசாமியும் மீண்டும் இணைந்துள்ள ‘வேட்டை’ தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகிறது. இந்தப் படத்தில் நாயகியின் கதாபாத்திரத்தை பற்றி லிங்குசாமி விளக்கியவுடன், ரொம்பவே பிடித்துபோய் உடனே நடிக்க சம்மதித்தாராம் சமீரா.    
சமீரா தற்போது நடித்துவரும் கௌதம் மேனனின் ‘நடுநிசி நாய்கள்’ விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளது. அதனைத்தொடர்ந்து சமீரா ‘வேட்டை’யின் நாயகியாக நடிக்கிறார்.

லிங்குசாமி இயக்கம், தயாரிப்பு என இப்போது படு பிஸி. தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவத்தின் சார்பில் அடுத்தடுத்து இரண்டு படம் தயாரிக்கவிருக்கிறார். 

மிஸ்கின் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவிருக்கும் படமும், பாலாஜி சக்திவேல் இயக்கவிருக்கும் ‘வழக்கு எண் 18/7’ எனும் படமும் லிங்குசாமியின் தயாரிப்பு லிஸ்டில் உள்ளன. 

தான் இயக்கும் 'வழக்கு எண் 18/7' படத்தில் நவீன 7டி ஸ்டில் கேமராவை முதன் முறையாக பயன்படுத்தப் போகிறாராம் பாலாஜி சக்திவேல். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக