செவ்வாய், 5 அக்டோபர், 2010

பொன்சேகா நாட்டைவிட்டு வெளியேற இணங்கின் மன்னிப்பு வழங்கப்படும்

குற்றவியல் நீதிமன்றத்தின் பரிந்துரையின்பேரில் ஜனாதிபதியினால் சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா நாட்டை விட்டு வெளியேற சம்மதிப்பாரேயாயின் அவரை விடுவிக்க ஜனாதிபதி தயாரென தெரிவித்துள்ளதாக சிங்கள செய்தியொன்று தெரிவிக்கின்றது. அரசியல் நடவடிக்கைகளை கைவிட்டு ஜெனரல் பொன்சேகா நாட்டைவிட்டு வெளியேற சம்மதிப்பின் அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்படுமென அமெரிக்காவிலுள்ள ஜெனரல் பொன்சேகாவின் உறவினர் ஒருவருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவல் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவரால் ஜெனரல் பொன்சேகாவின் உறவினருக்கு தெரியப்படுத்தப்பட்டதாக அச்செய்தி மேலும் கூறுகின்றது.

ஜெனரல் பொன்சேகா மன்னிப்பு கோரின் அவரை விடுதலை செய்வது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஜெனரல் பொன்சேகா நிராகரித்துள்ளதுடன் : குற்றம் செய்யாமல் எதற்கு மன்னிப்புகோர வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக