செவ்வாய், 26 அக்டோபர், 2010

அருந்ததி ராய் மீது வழக்கு பதிவு செய்ய ஆலோசனை

ஸ்ரீநகர்: காஷ்மீர் குறித்து பேசிய பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்கு பதிவு செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அருந்ததி ராய் காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்றும், அங்கு சுதந்திரத்திற்காக போராடுபவர்களை பிரிவினைவாதிகள் என்று கூறுவது சரியல்ல என்றார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அருந்ததி ராய்க்கு இதுபோன்று சர்ச்சைகளில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல, ஏற்கனவே நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக புத்தகம் மற்றும் ஆய்வு கட்டுகரைகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகவும் மேடைகளில் பேசியிருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக