செவ்வாய், 19 அக்டோபர், 2010

நடத்தையில் சந்தேகம் - தாயை கொன்ற மகன்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பெற்ற தாயை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர் வீரமாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகப்பெருமாள். தலையாரி. இவரது மனைவி மாரியம்மாள்(38).

இவர்களுக்கு திருமால் முத்து(22), அய்யப்பன்(10) என்ற 2 மகன்களும், இசக்கியம்மாள்(19) என்ற மகளும் உள்ளனர்.

தாய் மாரியம்மாள் நடத்தையின் மீது சந்தேகம் கொண்டு மகன் திருமால் முத்து அடிக்கடி சண்டை போடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் மாரியம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த திருமால்முத்து அவருடன் தகராறு செய்துள்ளார். பின்பு அரிவாளால் தாயின் கழுத்தில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அங்கிருந்து தங்கை இசக்கியம்மாள், தம்பி அய்யப்பன் ஆகியோரை பைக்கில் ஏற்றிகொண்டு திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரத்திற்கு விரைந்தார். அங்குள்ள ஒரு தோட்டத்தில் அவர்கள் இருவரையும் விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் இசக்கியம்மாள் வீட்டில் நடந்த சம்பவம் பற்றி தனது தந்தை முருகப்பெருமாளுக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் இசக்கி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக