செவ்வாய், 7 செப்டம்பர், 2010

பஸ்ஸின் மிதி பலகையில் பயணித்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸின் மிதிபலகையில் நின்று பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவர் கால் தடக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நுணாவில் மேற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த நமசிவாயம் இராசரட்ணம் (வயது-58) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

நுணாவில் அறவெளி சனசமூக நிலையத்திற்கு முன் குறித்த பஸ்ஸில் பயணித்த மற்று மொரு பயணி இறங்கிய பின் குறித்த நபர் மீண்டும் பஸ்ஸில் ஏறுகையிலேயே கால் தடக்கி விழுந்து படுகாயமடைந்தார்.

அவர் தலையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக